Tuesday 31 March 2020

விடுமுறை........

இந்த விடுமுறை நாம் நமது குடும்பத்துடன் செலவிட  கிடைத்த ஒரு பொன்னான வாய்ப்பு....
இதை நல்ல முறையில் உபயோகிப்பது நம் கையில் தான் உள்ளது .
இந்த விடுமுறை நாம் நமது வீட்டில் அடைந்து இருப்பதற்கான விடுமுறை அல்ல .
இந்த விடுமுறையை பயனுள்ளதாக மாற்றுங்கள் வீட்டில் இருப்பவர்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

vidumurai natkal
spend time with your children

உங்கள் மேல் அன்பு வைத்தவர்களை அக்கறையுடன் கவனித்து கொள்வதற்கான ஒரு நல்ல சந்தர்ப்பம் என எண்ணுங்கள்.
முதலாவதாக உங்களது குழந்தைகளுடன்  ஒன்றாக இருங்கள்.
அவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள்.
அவர்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
அவர்கள் உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.
இரண்டாவதாக மனைவியை கவனியுங்கள் வருடம் முழுவதும் தங்களது கணவன் மற்றும் குடும்பத்தைப் பற்றி  நினைப்பவர்கள்.

அவர்கள் எதிர்ப்பார்ப்பது அன்பு ஒன்று தான்.
மூன்றாவதாக அம்மா மற்றும் அப்பா, இவர்கள் நம்மிடம் பாசத்தை மாட்டுமே எப்பொழுதும் எதிர்பார்ப்பவர்கள்.

நமது பாசத்தை இவர்களுக்கு வெளிக்காட்ட தனது உணவை அவர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள், சிரித்து பேசி மகிழுங்கள் அவர்களையும் சிரிக்க வையுங்கள் இதுவே அவர்களுக்கு நாம் தரும் பெரிய சந்தோசம் .


                                                                                                                              இப்படிக்கு
                                                                                                                          ஜெ. யுக்திகா ,
                                                                                                                                                                                                                                                         
                                                                                   
                                                                                     
 



Popular Post From This Blog

விடுமுறை........